14.12.09

பச்சிளங்குழந்தை

பச்சிளங்குழந்தையின்
மழலைமொழிகேட்டு
மனம் மகிழும்
மாதா எங்கே?

தொட்டிலில் இட்டு
ஆரிரோ பாடி
தாலாட்டி உறங்கவைக்கும்
அன்புசால் அன்னை எங்கே?

குழந்தையின் பசியறிந்து
தாய்ப்பாலூட்டி
சீராட்டி வளர்க்கும்
உண்மைத்தாய் எங்கே?

பச்சிளங்குழந்தையின்
மழலைச் சொல்கேட்டு
பேசக் கற்றுத்தரும்
பாசமிகு அன்னை எங்கே?

இது
கணினி யுகமாகிவிட்டதால்
தாய்ப்பாசமும்
காணாமல் போய்விட்டதோ?

விஞ்ஞானக் காலத்தில்
மெய்யான தாயரெல்லாம்
பொய்யாகிவிட்டனரோ?
பாசமெல்லாம்
வேசமாகிவிட்டதோ?

வினாத் தொடுக்கின்றது
அன்னையின் அன்பையும்
அரவணைப்பையும் இழந்து
புட்டிப்பாலைப் பருகி
குழந்தைக் காப்பகத்தில்
வளர்கின்ற
பச்சிளங்குழந்தை.