27.12.08

கலிகாலம்


பெற்றெடுத்த குழந்தையைப்

பாசமின்றி

குப்பைத் தொட்டியில்

தூக்கியெறியும் அன்னை.


சொத்துக்காக

பெற்ற தந்தையையே

கொலை செய்கின்ற தனயன்.


பதவிக்காக

ஏழைகளின் குடிசைகளைத்

தீக்கிரையாக்கும் அரசியல்வாதிகள்.


கன்னியரின் கற்பை

காவல் நிலையத்திலேயே

சூறையாடும் காவலர்கள்.


பணத்திற்காக

வெட்கத்தைத் துறந்துவிட்ட

பெண்கள்-நடிகைகள்.


மதியைக் கெடுக்கின்ற

மதுவிற்கும்

மாதுகள்.


பணத்திற்காக

உடலைவிற்று

உடம்பு வளர்க்கும்

விலைமாதர்கள்.


நிதியைப் பெற்றுக்கொண்டு

நீதியை விற்றுவிடும்

நீதிபதிகள்.


யாவரையும்

இன்று காணும் நீ

நாளை


பெற்றெடுத்த தாயுடனே

உடலுறவு கொள்ளும்

தனயனையும் காண்பாய்.


காமவெறிகொண்ட

கன்னியர்கள்

ஆணைத் துறத்துகின்ற

அவலத்தையும் காண்பாய்.


நாய்கள் போல்

நடுவீதியில்

உறவுகொள்ளும்

நாகரிகமற்றோரையும் காண்பாய்.


நிர்வாணமாய்

நங்கையரெல்லாம்

ஒய்யாரமாய்

நடக்கக் காண்பாய்.


ஆம்.

இது கலிகாலம்.



(தமிழருவி-2001-இல் இடம்பெற்ற கவிதையிது.)