13.4.10

இறைமேல் நேசம்


எல்லோரும் உறங்கும்

நடுநிசி நேரத்தில்
படைத்தவன் பற்றிய
பயம் எனைப் பற்றவே
தூக்கத்தை எறிந்துவிட்டு
துன்பத்தைத் தாங்கி-இறை
பக்தனாக மாறிட
பக்கத்திலிருந்த
சனி நீரை எடுத்து
பனியென்றும் பாராமல்
உடல்சுத்தி செய்து
உறுதியாய் நின்றேன்.
நடுநிசித் தொழுகையை
நலவாய் முடித்தேன்.

பணத்தை விரும்பாமல்
பதவியைக் கேட்காமல்
படைத்தோனை நினைத்து
கண்ணீருடனே
கரமிரண்டை நீட்டிக்
கருணையாளனின்
அருள்வேண்டி நின்றேன்.

மாரெல்லாம் குளிரும்
மார்கழி மாதத்தில்
மாரியும் பனியும்
பொழியும் நேரத்தில்
உணர்வின்றி
உறங்கிக் கிடந்த நான்
படைத்தோன் பள்ளியில்
பாங்கொலி கேட்டு
பட்டென எழுந்து
சட்டென விரைந்து
குளிர்ந்த நீரில்
உடல் சுத்தம் செய்து
உயர்ந்தோன் அல்லாஹ்வை
வழிபடச் சென்றேன்.

எத்துணை பொருட்கள்
இத்தரணியில் இருந்தாலும்
உன்னையே நேசிப்பேன்
உன்னிடமே யாசிப்பேன்.